sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சத்துணவு சமையலர், உதவியாளருக்கு பயிற்சி

/

சத்துணவு சமையலர், உதவியாளருக்கு பயிற்சி

சத்துணவு சமையலர், உதவியாளருக்கு பயிற்சி

சத்துணவு சமையலர், உதவியாளருக்கு பயிற்சி


ADDED : மே 31, 2025 11:17 PM

Google News

ADDED : மே 31, 2025 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி :தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளது. இதன் காரணமாக, நேற்று முன்தினம் முதல் அரசு பள்ளிகளில் சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.

திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது. இதில் திருத்தணி, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை மற்றும் பூண்டி ஆகிய ஒன்றியங்களில் இருந்து, தலா ஐந்து சமையலர், ஐந்து உதவியாளர் வீதம், மொத்தம் 50 பேர் பங்கேற்றனர்.

இதில், உணவு தயாரிப்பு அலுவலர் கார்த்திக், பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் கலைவாணி, தீயணைப்பு துறை அலுவலர், ஊட்டச்சத்து துறை அலுவலர் மற்றும் யோகா பயிற்சி ஆசிரியர் பங்கேற்று, சமையல் மற்றும் உதவியாளர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

இதில், உணவு தரமாக தயாரித்து, பாதுகாப்பாக வைத்து மாணவர்களுக்கு பரிமாற வேண்டும். சமையல் செய்யும் போது தீ விபத்து தவிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us