sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மர்ம காய்ச்சலால் மூச்சு திணறல் இரண்டரை வயது குழந்தை பலி

/

மர்ம காய்ச்சலால் மூச்சு திணறல் இரண்டரை வயது குழந்தை பலி

மர்ம காய்ச்சலால் மூச்சு திணறல் இரண்டரை வயது குழந்தை பலி

மர்ம காய்ச்சலால் மூச்சு திணறல் இரண்டரை வயது குழந்தை பலி


ADDED : மே 03, 2025 11:19 PM

Google News

ADDED : மே 03, 2025 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த அல்லிப்பந்தாங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 33; கொத்தனார். இவரது மனைவி கீர்த்தனா, 28. இவர்களுக்கு இரண்டரை வயதில் சர்வேஷ் என்ற ஆண் குழந்தையும், ஐந்து மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில், இரு வாரங்களுக்கு முன் கீர்த்தனா, குடும்ப அறுவை சிகிச்சை செய்துக் கொண்டு தாய் வீட்டில் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, சர்வேஷுக்கு சளி மற்றும் காய்ச்சல் திடீரென அதிகரித்து, வலிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, கீர்த்தனா தனது பெற்றோர் உதவியுடன், குழந்தையை திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தைக்கு, நேற்று அதிகாலை மூச்சு திணறல் ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us