/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.6 லட்சம் மதிப்பிலான கஞ்சா கடத்திய இருவர் கைது
/
ரூ.6 லட்சம் மதிப்பிலான கஞ்சா கடத்திய இருவர் கைது
ADDED : அக் 17, 2025 11:21 PM

மீஞ்சூர்: ஆந்திராவில் இருந்து 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 15 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த இருவரை, மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ஆவடி கமிஷனர் சங்கர் உத்தரவின்படி, செங்குன்றம் மதுவிலக்கு போலீசார், ஆந்திரா மற்றும் வடமாநிலங்களில் இருந்து கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று அதிகாலை, சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலை வழியாக, சென்னைக்கு வரும் வாகனங்களை கண்காணித்து சோதனை செய்தனர். அப்போது, அப்பகுதியில், சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் கையில் வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது, 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 15 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிந்தது.
விசாரணையில், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த குமார், 37, அதே மாவட்டம், கொடுவிலார்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன், 25, என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார், பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.