sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

டூ - வீலர்கள் நேருக்கு நேர் மோதல் 3 பேர் படுகாயம்: வாகனம் தீக்கிரை

/

டூ - வீலர்கள் நேருக்கு நேர் மோதல் 3 பேர் படுகாயம்: வாகனம் தீக்கிரை

டூ - வீலர்கள் நேருக்கு நேர் மோதல் 3 பேர் படுகாயம்: வாகனம் தீக்கிரை

டூ - வீலர்கள் நேருக்கு நேர் மோதல் 3 பேர் படுகாயம்: வாகனம் தீக்கிரை


ADDED : மார் 27, 2025 02:22 AM

Google News

ADDED : மார் 27, 2025 02:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி,:ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மேட்டு குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி, 35. இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலை பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

நேற்று, வழக்கம்போல் வேலைக்கு சென்ற ராஜாமணி பணி முடிந்து, மதியம் உறவினர் தட்சிணாமூர்த்தியை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, நாரணமங்கலம் கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருத்தணி அரசு கலைக்கல்லூரி அருகே சென்றபோது, எதிரே மேதினிபுரம் கிராமத்தைச் சேர்ந்த அஜித், 22, என்பவரின் 'ஸ்கூட்டி' இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் ராஜாமணி, தட்சிணாமூர்த்தி, அஜித் உள்ளிட்ட மூன்று பேரும் படுகாயமடைந்தனர். மேலும், விபத்தில் சிக்கிய அஜித்தின் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. இதனால், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

திருத்தணி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மூன்று பேரையும் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக ராஜாமணி, அஜித் ஆகிய இருவரும், திருவள்ளூர் அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். அதற்குள் இருசக்கர வாகனம் முழுதும் தீயில் எரிந்து சேதமடைந்தது. வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us