/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தண்டலம் கோவிலில் உண்டியல் திருட்டு
/
தண்டலம் கோவிலில் உண்டியல் திருட்டு
ADDED : பிப் 20, 2025 09:38 PM
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, தண்டலம் கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவிலில், செவ்வாய், வெள்ளி மற்றும் விசேஷ நாட்களில் அதிகளவு பக்தர்கள் சென்று அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.
இரண்டு முறை இந்த கிராமக் கோவிலில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து பொதுமக்கள் பங்களிப்புடன், 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் வழக்கம் போல, கோவில் பூசாரி கார்த்திக், கோவிலை திறக்க சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, கோவில் உண்டியல் பெயர்த்து எடுத்து செல்லப்பட்டு இருந்தது தெரிந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில், பெரியபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கோவிலில் இருந்த, 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்த வருகின்றனர்.