/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பட்டியலின இளைஞர்களுக்கு தொழில் மேம்பாட்டு பயிற்சி
/
பட்டியலின இளைஞர்களுக்கு தொழில் மேம்பாட்டு பயிற்சி
ADDED : ஜூன் 06, 2025 09:16 PM
திருவள்ளூர்:'தாட்கோ' வாயிலாக பட்டியலின இளைஞர்களுக்கு தொழில் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
'தாட்கோ' மற்றும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஜி.எஸ்.டி., மற்றும் வருமான வரி தொழில்நுட்பம், தொழில் உற்பத்தி, டிஜிட்டல் திறன் மற்றும் பி.பி.ஓ., பயிற்சி, இணைய தொழில்நுட்பம் மற்றும் 'டிஜிட்டல் மார்க்கெட்டிங்' ஆகிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இப்பயிற்சியில் சேர 21 - 30 வயது வரை உள்ள, 2021 - 24ம் ஆண்டு வரை இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்படும். பயிற்சிக்கான கால அளவு 55 நாட்கள்.
பயிற்சியில் சேர விரும்புவோர் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் 'தாட்கோ' வாயிலாக வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.