sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருவேங்கிடபுரத்தில் பயனின்றி வீணாகும் குடிநீர் சுத்திகரிப்பு மையம்

/

திருவேங்கிடபுரத்தில் பயனின்றி வீணாகும் குடிநீர் சுத்திகரிப்பு மையம்

திருவேங்கிடபுரத்தில் பயனின்றி வீணாகும் குடிநீர் சுத்திகரிப்பு மையம்

திருவேங்கிடபுரத்தில் பயனின்றி வீணாகும் குடிநீர் சுத்திகரிப்பு மையம்


ADDED : ஆக 18, 2025 12:52 AM

Google News

ADDED : ஆக 18, 2025 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:திருவேங்கிடபுரத்தில், 10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல், ஓராண்டாக வீணாகி வருகிறது.

மீஞ்சூர் ஒன்றியம், தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட திருவேங்கிடபுரம் பகுதியில், நிலத்தடி நீர் உவர்ப்பாக இருப்பதால், அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகம் வழங்கும் தண்ணீரை குடிக்க பயன்படுத்துவதில்லை.

கேன்களில் அடைத்து விற்கப்படும் குடிநீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். 20 லிட்டர் கேன், 35 - 40 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

அப்பகுதி மக்களின் தொடர் கோரிக்கையின் பயனாக, கடந்தாண்டு செப்டம்பர் மாதம், என்.டி.சி.இ.எல்., நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், 10 லட்சம் ரூபாய் செலவில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

அதற்காக புதிய கட்டடம் கட்டப்பட்டு, அதில் சுத்திகரிப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டன. அனைத்து பணிகளும் முடிந்து ஓராண்டான நிலையில், தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் முடங்கியுள்ளது.

சுத்திகரிப்பு நிலையத்திற்கு, 10 லட்சம் ரூபாய் செலவிட்டு, தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்தியும், பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் இருப்பது, அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us