sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கழிவுநீர் கலப்பதால் கூவம் ஆற்றில் துர்நாற்றம் நீர்வளத்துறை அதிகாரிகள் அலட்சியம்

/

கழிவுநீர் கலப்பதால் கூவம் ஆற்றில் துர்நாற்றம் நீர்வளத்துறை அதிகாரிகள் அலட்சியம்

கழிவுநீர் கலப்பதால் கூவம் ஆற்றில் துர்நாற்றம் நீர்வளத்துறை அதிகாரிகள் அலட்சியம்

கழிவுநீர் கலப்பதால் கூவம் ஆற்றில் துர்நாற்றம் நீர்வளத்துறை அதிகாரிகள் அலட்சியம்


ADDED : செப் 02, 2025 12:27 AM

Google News

ADDED : செப் 02, 2025 12:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், மணவாள நகர் கூவம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. குப்பையை அகற்றி, கழிவுநீர் கலக்காமல் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டும் அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருகின்றனர்.

கடம்பத்துார் ஒன்றியம், கேசாவரத்தில் துவங்கும் கூவம் ஆறு, திருவள்ளூர், பூந்தமல்லி, சென்னை சென்ட்ரல் வழியாக வங்கக் கடலில் கலக்கிறது. துவங்கும் இடத்தில், மழை நீருடன் வரும் ஆற்றில் பூந்தமல்லி, திருவேற்காடு, கோயம்பேடு மற்றும் சென்னை நகரின் பல்வேறு இடங்களில், கழிவுநீர் கலக்கிறது.

மணவாளநகர், வெங்கத்துார், அரண்வாயல்குப்பம், பூந்தமல்லி வரை, கூவம் ஆற்றில் ஆங்காங்கே குப்பையை கொட்டியும், கழிவுநீரை வெளியேற்றியும் வருகின்றனர்.

இந்த குப்பை மற்றும் கழிவுநீர் அனைத்தும், ரயில் நிலையத்திற்கு செல்லும் தரைப்பாலம் அருகில் குவிந்துள்ளது. இதனால், ஆற்றில் தேங் கியுள்ள தண்ணீரும் மாசடைந்து, துர்நாற்றம் வீசி வருகிறது.

கடந்த ஜூனில் கூவம் ஆற்றை கலெக்டர் பிரதாப் பார்வையிட்டார். அன்று, ஆற்றில் தேங்கிய குப்பையை நீர்வளத்துறையினர் அகற்றினர்.

அதன் பின், 'நகராட்சி மற்றும் நீர்வளத் துறையினர், இரவு நேரங்களில் இந்த இடங்களை ஆய்வு செய்து, கூவம் ஆற்றில் குப்பை கொட்டாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.

இருப்பினும் அதிகாரிகள் அலட்சியத்தால் குப்பை அகற்றப்படாமலும், கழிவுநீர் கலப்பது தொடர்வதாலும், மீண்டும் கூவம் ஆற்றில் துர்நாற்றம் வீசி வருகிறது.

எனவே, நீர்வளத்துறையினர் ஆய்வு செய்து, கூவம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என, பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us