sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

எல்லையோர காவல் நிலையங்களுக்கு இன்ஸ்பெக்டர் நியமிப்பது எப்போது?

/

எல்லையோர காவல் நிலையங்களுக்கு இன்ஸ்பெக்டர் நியமிப்பது எப்போது?

எல்லையோர காவல் நிலையங்களுக்கு இன்ஸ்பெக்டர் நியமிப்பது எப்போது?

எல்லையோர காவல் நிலையங்களுக்கு இன்ஸ்பெக்டர் நியமிப்பது எப்போது?


ADDED : ஏப் 21, 2025 11:38 PM

Google News

ADDED : ஏப் 21, 2025 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி, சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திர எல்லையை ஒட்டி ஆரம்பாக்கம் பகுதி அமைந்துள்ளது. ஆந்திரா, ஒடிசா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், பீஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட முக்கிய வடமாநிலங்களில் இருந்து சாலை மார்க்கமாக வரும் அனைத்து வாகனங்களும், ஆரம்பாக்கத்திற்குள் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன.

கஞ்சா, குட்கா, மணல் உள்ளிட்டவை மேற்கண்ட வெளி மாநிலங்களில் இருந்து, ஆரம்பாக்கம் வழியாக தமிழகத்திற்குள் அதிகளவு கடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் முக்கிய நுழைவாயிலாக அமைந்துள்ள ஆரம்பாக்கம், ஒன்பது மாதங்களாக இன்ஸ்பெக்டர் இன்றி உள்ளது. ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டரின் கட்டுப்பாட்டில், மற்றொரு ஆந்திர எல்லையோர காவல் நிலையமான பாதிரிவேடு உள்ளது.

இரு மாநில எல்லையோர காவல் நிலையங்களுக்கான இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படாமல் இருப்பதால், எல்லை பகுதியில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படுவதுடன், இன்ஸ்பெக்டர் தொடர்புடைய பணிகள் அனைத்திலும் தொய்வு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தமிழக எல்லை பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து, ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் உடனடியாக இன்ஸ்பெக்டரை நியமிக்க, மாவட்ட காவல் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us