/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆகாய தாமரை சூழ்ந்த கால்வாய் துார்வாரி சீரமைப்பது எப்போது?
/
ஆகாய தாமரை சூழ்ந்த கால்வாய் துார்வாரி சீரமைப்பது எப்போது?
ஆகாய தாமரை சூழ்ந்த கால்வாய் துார்வாரி சீரமைப்பது எப்போது?
ஆகாய தாமரை சூழ்ந்த கால்வாய் துார்வாரி சீரமைப்பது எப்போது?
ADDED : அக் 30, 2024 09:43 PM

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு, கே.ஆர்.பாளையம், தமிழ்கொரஞ்சூர் வழியாக பகிங்ஹாம் கால்வாய்க்கு செல்லும் ஓடைக்கால்வாய் முழுதும் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. கால்வாய் கரைகளில் முட்செடிகள் வளர்ந்தும், தேங்கிய தண்ணீரில் ஆகாயத்தாமரைகள் சூழந்தும் உள்ளன.
இந்த கிராமங்களில் நிலத்தடி நீர் உவர்ப்பால், ஆழ்துளை கிணறுகள் வாயிலாக கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கொசஸ்தலை ஆற்றில் இருந்தும், டிராக்டர்கள் வாயிலாகவும் தண்ணீர் கொண்டு வந்து குடியிருப்புகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.
இது கிராமவாசிகளுக்கு போதுமானதாக இல்லை. இதனால், கோடை காலங்களில் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதே சமயம் ஓடை கால்வாயில் தேங்கும் தண்ணீரையும், தங்களது தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியாமல் கிராமவாசிகள் தவித்து வருகின்றனர்.
ஓடைக்கால்வாயில் சூழ்ந்து இருக்கும் ஆகாயத் தாமரைகளை அவ்வப்போது அகற்றி, துாய்மையாக வைத்திருக்கவும், கிராமவாசிகள் பயன்படுத்துவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.