sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 செயல் அலுவலர் பணியிடத்தை நிரப்புவது எப்போது?

/

 செயல் அலுவலர் பணியிடத்தை நிரப்புவது எப்போது?

 செயல் அலுவலர் பணியிடத்தை நிரப்புவது எப்போது?

 செயல் அலுவலர் பணியிடத்தை நிரப்புவது எப்போது?


ADDED : நவ 22, 2025 02:05 AM

Google News

ADDED : நவ 22, 2025 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமழிசை: திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே திருமழிசை பேரூராட்சி அமைந் துள்ளது. இங்கு, 15 வார் டுகளில் 25,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

கடந்த ஜூன் மாதம், திருமழிசை பேரூராட்சி செயல் அலுவலராக பணி புரிந்து வந்த வெங்கடேஷ், 60, என்பவர் ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, ஊத்துக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலராக பணிபுரிந்து வரும் சதீஷ், கூடுதலாக திருமழிசையை கவனித்து வருகிறார்.

இரு பேரூராட்சிகளையும் கவனித்து வருவதால், வாரத்தில் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் வருவதால், திருமழிசை மக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் மற்றும் செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்து, செயல் அலுவலரிடம் தெரிவிக்க முடியாத அவலநிலை நீடிக்கிறது.

எனவே, திருமழிசை பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலரை நியமித்து, மக்களின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய, மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us