/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரக்கோணம் தொகுதியில் யாரிடம் குறை கேட்பது?: சோளிங்கரில் அண்ணாமலை சாடல்
/
அரக்கோணம் தொகுதியில் யாரிடம் குறை கேட்பது?: சோளிங்கரில் அண்ணாமலை சாடல்
அரக்கோணம் தொகுதியில் யாரிடம் குறை கேட்பது?: சோளிங்கரில் அண்ணாமலை சாடல்
அரக்கோணம் தொகுதியில் யாரிடம் குறை கேட்பது?: சோளிங்கரில் அண்ணாமலை சாடல்
ADDED : பிப் 07, 2024 01:26 AM

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' நடைபயணம் மேற்கொண்டார்.
பணக்கார எம்.பி.,
சோளிங்கர் கருமாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து, நகரின் மையத்தில் அமைந்துள்ள பக்கோசித பெருமாள் கோவில் எதிரே தொண்டர்களிடையே பேசினார்.
அண்ணாமலை பேசியதாவது:
அரக்கோணம் தொகுதி மக்கள், மிகவும் பரிதாபத்திற்கு உரியவர்கள். தங்களின் தேவையை யாரிடமும் சொல்ல முடியாத நிலையில் உள்ளனர்.
அரக்கோணம் தொகுதி எம்.பி., ஜெகத்ரட்சகன், இந்தியாவிலேயே மிகவும் பணக்கார எம்.பி., சமீபத்தில் அவருக்கு உரிய இடங்களில் சோதனை மேற்கொண்ட போது, 1,250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்டது. அவர் வசதியாக தான் இருக்கிறார். ஆனால், அவரது தொகுதி மக்கள் தான் பரிதாப நிலையில் உள்ளனர்.
பா.ஜ., தான் தீர்வு
இந்த மாவட்டத்தை சேர்ந்தவர் அமைச்சர் காந்தி. காந்தி என்ற பெயர் வைத்திருப்பதாலேயே, அவருக்கு, கைத்தறித்துறை வழங்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டையில் அவர் புதிதாக கட்டிவரும் பங்களாவை இன்று பா.ஜ., தொண்டர்கள் எனக்கு காட்டினர். எவ்வளவு ஆடம்பரமாக, விஸ்தீரனமாக கட்டப்பட்டு வருகிறது.
சோளிங்கர் தொகுதி எம்.எல்.ஏ., காங்., கட்சியை சேர்ந்தவர். காங்., கட்சியினரை, தேர்தலின் போது மட்டுமே பார்க்க முடியும். இந்த தொகுதி மக்கள் யாரிடம் தங்களின் கோரிக்கைகளை தேவைகளை தெரிவிக்க முடியும். ராமர் கோவில், காஷ்மீர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு, பா.ஜ., ஆட்சியில்தான் தீர்வு காணப்பட்டுள்ளது.
வாக்களிக்க வேண்டும்
இந்தியாவை, உலகளவில் பொருளாதர வளர்ச்சி நாடுகள் பட்டியலில், 2044ல் மூன்றாவது இடத்திற்கு கொண்டு வருவதாக, கடந்த 2014 தேர்தலின் போது காங்., தெரிவித்தது.
ஆனால் கடந்த 10 ஆண்டுகால, மோடி ஆட்சியில் இந்தியா, பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகள் பட்டியலில், ஐந்தாவது இடத்திற்கு வந்துள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில் மோடி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைத்ததும், 2018ல், மூன்றாவது இடத்திற்கு இந்தியா சென்றுவிடும்.
காங்., கணிப்பை விட முன்னதாகவே, இந்தியா அத்தகைய நிலையை அடைந்துவிடும்.
அரக்கோணம் தொகுதி மக்கள் சேவை செய்யக்கூடிய, ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
பிரதமர் மோடி தேர்ந்தெடுக்கும் ஒருவரை அரக்கோணம் தொகுதி எம்.பி.,யாக தேர்ந்தெடுக்க நீங்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

