sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மது பங்கிடுவதில் கணவரிடம் தகராறு: மனைவி தற்கொலை

/

மது பங்கிடுவதில் கணவரிடம் தகராறு: மனைவி தற்கொலை

மது பங்கிடுவதில் கணவரிடம் தகராறு: மனைவி தற்கொலை

மது பங்கிடுவதில் கணவரிடம் தகராறு: மனைவி தற்கொலை


ADDED : ஜூன் 09, 2025 11:42 PM

Google News

ADDED : ஜூன் 09, 2025 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை மது பங்கிடுவதில் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் மனைவி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ராஜிவ்காந்தி நகரில் வசித்து வந்தவர் தங்கராஜ், 45. இவரது மனைவி லட்சுமி, 36. தங்கராஜ் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் செங்கல் சேம்பரில் வேலை செய்து வந்தார்.

கணவன், மனைவி இருவரும் ஒன்றாக மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்தனர். கடந்த மாதம் 30ம் தேதி கணவன், மனைவி இருவரும் ஒன்றாக மது அருந்தினர். இருவருக்கும் இடையே மது பங்கிடுவதில் தகராறு ஏற்பட்டது.

இதில் ஒருவருக்கொருவர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஆத்திரமடைந்த லட்சுமி தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். கணவர் மீதும் தீ பரவியது.

இருவரும் அலறியதில் அங்கிருந்தவர்கள் தீக்காயம் அடைந்த லட்சுமியை மீட்டனர். கணவன், மனைவி இருவரையும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

லட்சுமி மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த லட்சுமி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.






      Dinamalar
      Follow us