/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கழிவுநீர் அத்துமீறல்களை கட்டுப்படுத்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுமா?
/
கழிவுநீர் அத்துமீறல்களை கட்டுப்படுத்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுமா?
கழிவுநீர் அத்துமீறல்களை கட்டுப்படுத்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுமா?
கழிவுநீர் அத்துமீறல்களை கட்டுப்படுத்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுமா?
ADDED : நவ 15, 2025 10:20 PM
கும்மிடிப்பூண்டி: டே ங்கர் லாரிகளில் ஏற்றி வரப்படும் கழிவுநீரை, ஏரியின் மழைநீர் வடிகால்வாயில் திறந்து விடுவதால், நீர்நிலை மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில், கும்மிடிப்பூண்டியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி பகுதியில், 20க்கும் மேற்பட்ட கழிவுநீர் சேகரிக்கும் டேங்கர் லாரிகள் மற்றும் டிராக்டர்கள் உள்ளன. அதன் மூலம், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீரை, திருமழிசையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
ஆனால், அதற்காக ஆகும் நேரம் மற்றும் செலவை எண்ணி, கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள சென்னை -- கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையோரம், மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீர் திறந்து விடுவதை டேங்கர் லாரி உரிமையாளர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
மழைநீர் கால்வாயில் திறந்து விடப்படும் கழிவுநீர் நேராக, கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியில் கலக்கிறது. இதனால், தாமரை ஏரி மாசடைந்ததுடன், நிலத்தடி நீரும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. மேலும், அடுத்தடுத்த நீர்நிலைகளும் மாசடைகின்றன.
அத்துமீறும் டேங்கர் லாரிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தால், வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்வதுடன், கும்மிடிப்பூண்டியில் சுத்திகரிப்பு நிலையம் துவக்க வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதை, டேங்கர் லாரி உரிமையாளர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதனால், அத்துமீறல்களை கட்டுப்படுத்த முடியாமல், அரசு துறையினரும் திணறி வருகின்றனர். கும்மிடிப்பூண்டியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுவரை, பாதுகாப்பாக கழிவுநீரை அப்புறப்படுத்த, டேங்கர் லாரி உரிமையாளர்களை அழைத்து, அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

