/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
20 மாதத்தில் பள்ளி கட்டடம் சேதம் தரமின்றி கட்டியதால் நடக்குது பணி கலெக்டர் சாட்டையை சுழற்றுவாரா?
/
20 மாதத்தில் பள்ளி கட்டடம் சேதம் தரமின்றி கட்டியதால் நடக்குது பணி கலெக்டர் சாட்டையை சுழற்றுவாரா?
20 மாதத்தில் பள்ளி கட்டடம் சேதம் தரமின்றி கட்டியதால் நடக்குது பணி கலெக்டர் சாட்டையை சுழற்றுவாரா?
20 மாதத்தில் பள்ளி கட்டடம் சேதம் தரமின்றி கட்டியதால் நடக்குது பணி கலெக்டர் சாட்டையை சுழற்றுவாரா?
ADDED : அக் 05, 2025 01:19 AM

திருவாலங்காடு:சின்னகளக்காட்டூரில் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்த அரசு பள்ளி கட்டடம், 20 மாதங்களில் சேதமடைந்ததால், தற்போது சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. கட்டுமானம் சரியில்லாததே காரணம் என, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
திருவாலங்காடு ஒன்றியம் பெரியகளக்காட்டூர் ஊராட்சியில் சின்னகளக்காட்டூர் கிராமம் அமைந்துள்ளது. இங்க, 40 ஆண்டுகளாக அரசு துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
கூரை சேதம் இப்பள்ளி கட்டடம் 2021ம் ஆண்டு சேதமடைந்ததால், அதை அகற்றிவிட்டு புதிதாக கட்ட வேண்டும் என, பெற்றோர் மற்றம் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, 2022 -- 2023ம் ஆண்டு குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் இருந்து, 28 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
அதன்படி, இரண்டு வகுப்பறை கொண்ட புதிய பள்ளி கட்டடம், 2013 டிச., 14ம் தேதி திறக்கப்பட்டது. மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளே சென்றதும் தரை பெயர்ந்து உடைந்தது.
இதனால், புதிய பள்ளிக்குள் சென்ற வேகத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அலறியடித்து வெளியேறினர். இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக, அப்போதைய கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதன்பின் சீரமைக்கப்பட்டு, 2024 பிப்., 11ம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில், கட்டடம் திறக்கப்பட்டு 20 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், கட்டடத்தின் கூரை மற்றும் படிக்கட்டு கைபிடி சுவர் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளது.
தற்போது, ஒன்றிய பொது நிதியில் இருந்து, 40,000 ரூபாய் ஒதுக்கப்பட்டு பணி நடப்பதாக கூற ப்படுகிறது. இதனால், சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், கட்டடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டதாக புகார் தெரிவித்த நிலையில், அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாததே காரணம் என, அவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
கேள்விக்குறி இதுகுறித்து, திருவாலங்காடைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
ஆளுங்கட்சியினர், ஒப்பந்ததாரர்கள் மூலம் பணி மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு கட்டப்படும் கட்டடத்தின் உறுதிதன்மை கேள்விக்குறியாகி உள்ளது. ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளும் ஆய்வு செய்வதில்லை. திருவள்ளூர் கலெக்டர் சாட்டையை சுழற்றினால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.