நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:மாதர்பாக்கம் அருகே, நெல்லிமரத்துகண்டிகை கிராமத்தில், மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று, அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அங்கு கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்து கொண்டிருந்த, லதா, 45, என்ற பெண்ணை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து, 26 குவாட்டர் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்கு பதிந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.