நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி;கும்மிடிப்பூண்டி ஏரிக்கரை தெருவில், அரசு மதுக்கடை இயங்காத நேரத்தில் மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கும்மிடிப்பூண்டி போலீசார், நேற்று அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அதே பகுதியை சேர்ந்த தெய்வநாயகி, 58, என்ற பெண் மது விற்பனை செய்து வந்தது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து, 10 குவார்ட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.