ADDED : அக் 09, 2024 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை,:பெரியபாளையம் அருகே, கன்னிகைப்பேர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
பெரியபாளயைம் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கடையை சோதனை செய்த போது, ஒரு பையில் இருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதில் ஹான்ஸ், 15, விஐ91 என மொத்தம், 106 பாக்கெட்டுகள் இருந்தது. இதன் மதிப்பு, 3 ஆயிரம். போலீசார், கடையின் உரிமையாளர் சாமந்தியை, 44 கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.