sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மணல் லாரி மோதி வாலிபர் பலி

/

மணல் லாரி மோதி வாலிபர் பலி

மணல் லாரி மோதி வாலிபர் பலி

மணல் லாரி மோதி வாலிபர் பலி


ADDED : ஏப் 27, 2025 03:37 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 03:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஆந்திர மாநிலம், தாமரைக்குப்பம், மதனஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் அரசு மணல் குவாரி செயல்படுகிறது.

அதிகாலை முதல் நள்ளிரவு வரை இங்குள்ள மணல் லாரிகள் ஊத்துக்கோட்டை வழியே செல்கின்றன .நேற்று தாமரைக்குப்பம் பகுதியில் இருந்து மணல் ஏற்றி வந்த லாரி, அதிகாலை, 5:30 மணிக்கு லட்சிவாக்கம் கிராமத்தில் சென்று கொண்டு இருந்தபோது, லாரி கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள கட்டடத்தில் மோதியது.

அப்போது அந்த கட்டடத்தின் அருகே பைக்கில் நின்று கொண்டு இருந்த, சூளைமேனி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக், 30 சிக்கிக் கொண்டார். லாரி ஓட்டுநர் தப்பி ஓடினார். லாரி மோதிய சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.

ஊத்துக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us