sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

நள்ளிரவில் 2 ஆம்னி பஸ்கள் பறிமுதல்: பயணியர் தவிப்பு

/

நள்ளிரவில் 2 ஆம்னி பஸ்கள் பறிமுதல்: பயணியர் தவிப்பு

நள்ளிரவில் 2 ஆம்னி பஸ்கள் பறிமுதல்: பயணியர் தவிப்பு

நள்ளிரவில் 2 ஆம்னி பஸ்கள் பறிமுதல்: பயணியர் தவிப்பு


ADDED : ஜூன் 21, 2024 12:47 AM

Google News

ADDED : ஜூன் 21, 2024 12:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:'தமிழகத்தில் வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்க அனுமதி இல்லை' என, போக்குவரத்துத் துறை அறிவித்தது.

இதையடுத்து, சட்டத்துக்கு புறம்பாக இயக்கப்படும் ஆம்னி பஸ்களை சிறைபிடிக்கும் பணியில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நேற்று முன்தினம் இரவு ஈடுபட்டனர்.

துாத்துக்குடி -- மதுரை தேசிய நெடுஞ்சாலையில், புதுார்பாண்டியாபுரம் டோல்கேட் அருகே, துாத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் தலைமையில் அதிகாரிகள் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். 20க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் சோதனை செய்யப்பட்டன.

திருச்செந்துாரில் இருந்து பெங்களூருக்கு பயணியரை ஏற்றிச் சென்ற, ராயல் டிராவல்ஸ், எஸ்.ஆர்.எஸ்., டிராவல்ஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான இரண்டு ஆம்னி பஸ்கள் விதிமுறையை மீறி இயக்கப்பட்டதாகக் கூறி, அதிகாரிகள் சிறைபிடித்தனர்.

இதனால், அந்த பஸ்களில் பெங்களூரு செல்ல இருந்த 58 பயணியர் தவித்தனர்; வட்டார போக்குவரத்து அலுவலரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சிறிது நேரத்தில் அவர்களுக்கு ஆம்னி பஸ் நிறுவனத்தில் இருந்து, 'வாகனம் பிரேக் டவுன், உங்களது பயணம் ரத்து செய்யப்படுகிறது' என்ற அலைபேசிக்கு தகவல் வந்தது.

இதையடுத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் விநாயகம், 58 பயணியருக்கும் துாத்துக்குடி அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் பெங்களூரு செல்வதற்கு குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட பஸ்சை ஏற்பாடு செய்தார்.

இரண்டு ஆம்னி பஸ்களில் வந்த 53 பயணியர், பெங்களூருக்கு புறப்பட்டு சென்றனர். ஐந்து பேர் பயணத்தை ரத்து செய்துவிட்டு வீடு திரும்பினர்.

நள்ளிரவில் ஆம்னி பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டதால், 58 பயணியரும் மிகவும் சிரமம் அடைந்தனர்.






      Dinamalar
      Follow us