sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

நடுக்கடலில் படகு பழுது காற்றின் போக்கில் ராமேஸ்வரம் சென்ற மீனவர்கள்

/

நடுக்கடலில் படகு பழுது காற்றின் போக்கில் ராமேஸ்வரம் சென்ற மீனவர்கள்

நடுக்கடலில் படகு பழுது காற்றின் போக்கில் ராமேஸ்வரம் சென்ற மீனவர்கள்

நடுக்கடலில் படகு பழுது காற்றின் போக்கில் ராமேஸ்வரம் சென்ற மீனவர்கள்


ADDED : ஆக 03, 2024 12:12 AM

Google News

ADDED : ஆக 03, 2024 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:தூத்துக்குடி நடுக்கடலில் பைபர் படகு பழுது காரணமாக நடுக்கடலில் தத்தளித்த 3 மீனவர்கள், காற்றின் போக்கில் ராமேஸ்வரத்தில் கரை சேர்ந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரத்தை சேர்ந்த அண்டோ(52), பூபால்ராய புரத்தை சேர்ந்தவர்கள் நிக்கோலஸ் (28), பிரகாஷ்(45). கடந்த 4 நாட்களுக்கு முன் துாத்துக்குடியில் இருந்து பைபர் படகில் கடலுக்கு சென்றனர். அவர்கள் கரை திரும்பாததால் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் தவித்தனர். இதுகுறித்து மரைன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

கடலோர காவல்படைக்கு தகவல் அனுப்பிய போலீசார் தேடுதல் பணியை துவங்கினர். இந்நிலையில் படகில் சென்ற மீனவர்கள் தங்களது குடும்பத்தினரிடம் பேசியுள்ளனர்.

நடுக்கடலில் படகு திடீரென பழுதாகி நின்றுவிட்டதாகவும், காற்றின் போக்கில் ராமேஸ்வரம் பாம்பன் பாலம் இடையே கரையில் சேர்ந்ததாகவும் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து துாத்துக்குடியில் சென்ற அவர்களது உறவினர்கள் ராமேஸ்வரம் சென்று 3 பேரையும் ஊருக்கு அழைத்து வந்தனர்.






      Dinamalar
      Follow us