sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

தொழிலாளி கொலை: விவசாயிக்கு ஆயுள்

/

தொழிலாளி கொலை: விவசாயிக்கு ஆயுள்

தொழிலாளி கொலை: விவசாயிக்கு ஆயுள்

தொழிலாளி கொலை: விவசாயிக்கு ஆயுள்


ADDED : ஜூலை 02, 2024 08:37 PM

Google News

ADDED : ஜூலை 02, 2024 08:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:துாத்துக்குடி அருகேயுள்ள தெய்வச்செயல்புரம் வடக்கு காரசேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தொழிலாளி சண்முகம், 65. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஆறுமுகம், 65, என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில்,2018ம் ஆண்டு சண்முகம், அவரது மனைவி செல்லம்மாள், 60, மகள் சண்முகசுந்தரி, 35, ஆகியோர் வீட்டின் வாசலில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஆறுமுகம், மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சண்முகத்தை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி விட்டார்.

பலத்த காயமடைந்த சண்முகம் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஆறு நாட்கள் கழித்து உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த முறப்பநாடு போலீசார் ஆறுமுகத்தை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை, துாத்துக்குடி இரண்டாவது கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி உதயவேலவன் குற்றம் சாட்டப்பட்ட ஆறுமுகத்துக்கு ஆயுள் தண்டனை மற்றும் 11,000 ரூபாய் அபராதம் விதித்தார். இதையடுத்து, ஆறுமுகம் பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us