sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

திருச்செந்துார் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்

/

திருச்செந்துார் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்

திருச்செந்துார் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்

திருச்செந்துார் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்

1


ADDED : மார் 04, 2025 05:29 AM

Google News

ADDED : மார் 04, 2025 05:29 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்ர மணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருச்செந்துார் சுப்ர மணிய சுவாமி கோவிலில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சியில் ஒன்றான மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதையொட்டி, அதிகாலை 1:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.

தொடர்ந்து, கோவில் கொடிமரம் முன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் செப்பு கொடி மரத்தில் மாசித் திருவிழா கொடியை பட்டாச்சாரியார் முத்துக்குமார சுவாமி ஏற்றினார்.

தொடர்ந்து கொடி மரத்திற்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகமும், மகா தீபாராதனையுடன் நடந்தது.

கோவில் தக்கார் அருள்முருகன், இணை கமிஷனர் ஞானசேகரன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

மொத்தம் 12 நாட்கள் நடக்கும் மாசி திருவிழாவில் ஏழாம் திருநாளான ஒன்பதாம் தேதி சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி எழுந்தருளும் நிகழ்ச்சியும், எட்டாம் திருநாளான 10ம் தேதி அதிகாலையில் சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

அன்றைய தினம் மதியம் 12:00 மணிக்கு மேல் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

சிகர நிகழ்ச்சியான 10ம் திருநாள் தேரோட்டம் வரும் 12ம் தேதி நடக்கிறது. அன்று காலை 7:00 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்கள். 11ம் திருநாளான 13ம் தேதி இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us