/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பள்ளி வேன் டூவீலர் மோதல் 2 பேர் பலி
/
பள்ளி வேன் டூவீலர் மோதல் 2 பேர் பலி
ADDED : ஜூலை 23, 2024 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம்திருச்செந்துார் அருகே நத்தக்குளத்தை சேர்ந்தவர் லிங்கம் 48. விவசாயி. அம்மன் புரத்தை சேர்ந்தவர் ரமேஷ் 26. டிரைவர்.
இருவரும் ஒரு டூவீலரில் திருச்செந்தூர் - திருநெல்வேலி சாலையில் சென்றனர். வள்ளிவிளை அருகே சென்ற போது திருச்செந்தூர் நோக்கி சென்ற தனியார் பள்ளி வாகனமும் டூவீலரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. லிங்கம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
ரமேஷ் திருச்செந்துார்மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். லிங்கத்துக்கு மனைவி, 4 குழந்தைகள் உள்ளனர். ரமேஷுக்கு திருமணமாகவில்லை.