sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

பணிகளை தரமாக செய்யுங்கள் அதிகாரிகளுக்கு கண்காணிப்பு அலுவலர் உத்தரவு

/

பணிகளை தரமாக செய்யுங்கள் அதிகாரிகளுக்கு கண்காணிப்பு அலுவலர் உத்தரவு

பணிகளை தரமாக செய்யுங்கள் அதிகாரிகளுக்கு கண்காணிப்பு அலுவலர் உத்தரவு

பணிகளை தரமாக செய்யுங்கள் அதிகாரிகளுக்கு கண்காணிப்பு அலுவலர் உத்தரவு


ADDED : செப் 13, 2024 02:01 AM

Google News

ADDED : செப் 13, 2024 02:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் வீடுகள், விவசாய நிலங்களை தண்ணீர் சூழ்ந்தது. மேலும், துாத்துக்குடி நகரின் வடிகாலான உப்பாற்று ஓடையில், 22 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது.

அந்த ஓடையை, 5.91 கோடி ரூபாய் மதிப்பில் பலப்படுத்தும் பணி நடக்கிறது. அந்தப் பணிகள் தரமானதாக இல்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.

இதுகுறித்து, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.

இந்நிலையில், உப்பாற்று ஓடைக்கரைகளை பலப்படுத்தும் பணிகளையும், உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணிகளையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலரான தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலர் வீரராகவராவ், கலெக்டர் இளம்பகவத்துடன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி தலைமையில், அதிகாரி வீரராகவராவிடம் பல குற்றச்சாட்டுகளை கூறினர்.

குறிப்பாக, பருவமழை துவங்குவதற்கு முன் பணிகளை முடிக்க வேண்டும் என்ற முனைப்பு அதிகாரிகளிடம் இல்லை என கூறிய அவர்கள், உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணி தரமானதாக இல்லை எனவும் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, அதிகாரிகளை அழைத்த கண்காணிப்பு அலுவலர், அவர்களுக்கு டோஸ் விட்டார். அவர் கூறியதாவது:

இதுவரை, 70 சதவீதப் பணிகள் முடிந்துள்ளதாக கூறியுள்ளீர்கள். ஆனால், விவசாயிகள் தரமானதாக இல்லை என புகார் கூறுகின்றனர். மீதமுள்ள, 30 சதவீத பணிகளையாவது தரமானதாக செய்யுங்கள்.

கரையை பலப்படுத்தும்போது, 10 மீ., தொலைவுக்கு அப்பால் தான் மண் எடுக்க வேண்டும் என விதிமுறை உள்ளது. ஆனால், சில இடங்களில் 10 அடிகளிலேயே மண் எடுத்து பணி நடக்கிறது. அவ்வாறு செய்தால் மழைக்காலத்தில் தண்ணீர் வேகமாக வரும்போது கரையில் மீண்டும் உடைப்பு ஏற்படும்.

எனவே, மீதமுள்ள பணிகளையாவது விரைந்து தரமாக செய்ய வேண்டும். அந்த பணிகள் குறித்து தினமும் போட்டோ எடுத்து எனக்கு அப்டேட் செய்ய வேண்டும். இல்லையென்றால் நடவடிக்கை கடுமையாக இருக்கும்.

பணியில் தரமில்லை என்றால் பணம் வழங்கப்பட மாட்டாது.

இவ்வாறு அவர் எச்சரிக்கை விடுத்தார்.






      Dinamalar
      Follow us