sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

இலங்கைக்கு கடத்தவிருந்த 3,000 கிலோ பீடி இலை

/

இலங்கைக்கு கடத்தவிருந்த 3,000 கிலோ பீடி இலை

இலங்கைக்கு கடத்தவிருந்த 3,000 கிலோ பீடி இலை

இலங்கைக்கு கடத்தவிருந்த 3,000 கிலோ பீடி இலை


ADDED : ஜன 25, 2025 02:07 AM

Google News

ADDED : ஜன 25, 2025 02:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:துாத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 3,000 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

துாத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தலைமையிலான போலீசார், துாத்துக்குடி, இனிகோநகர் கடற்கரை பகுதியில் சோதனை நடத்தினர். அங்கிருந்த பைபர் படகில், இலங்கைக்கு கடத்துவதற்காக, 43 மூட்டைகளில் இருந்த, 1,200 கிலோ பீடி இலையை பறிமுதல் செய்தனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டெம்போ சரக்கு வாகனம், பைபர் படகையும் பறிமுதல் செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

அதே போல, ஆத்துார் அருகே உள்ள ஜெயராமச்சந்திராபுரம் தாமிரபரணி ஆற்று படுகையில் இருந்து, படகில் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 மூட்டைகளில் இருந்த 1,800 கிலோ பீடி இலைகளையும், கியூ பிரிவு போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.

இவற்றின் மதிப்பு, 50 லட்சம் ரூபாய்.






      Dinamalar
      Follow us