/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்துார் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
/
திருச்செந்துார் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 07, 2025 03:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 6:15 முதல், 6:50 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.
இதை முன்னிட்டு, கோவிலுக்குள் நேற்று மதியம் 12:00 மணிக்கு பின் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
கும்பாபிஷேகம் முடிந்ததும் பக்தர்கள் மீது புனித நீர் தெளிப்பதற்காக, 20 ட்ரோன் வசதி செய்யப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் 6,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.