sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

கவின் ஆணவக் கொலையில் சுர்ஜித்தின் உறவினர் கைது

/

கவின் ஆணவக் கொலையில் சுர்ஜித்தின் உறவினர் கைது

கவின் ஆணவக் கொலையில் சுர்ஜித்தின் உறவினர் கைது

கவின் ஆணவக் கொலையில் சுர்ஜித்தின் உறவினர் கைது


ADDED : ஆக 14, 2025 02:54 AM

Google News

ADDED : ஆக 14, 2025 02:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலியில் கவின் ஆணவக் கொலையில் சுர்ஜித்தின் பெரியம்மா மகன் ஜெயபால் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலியில் ஜூலை 27 ல் நடந்த கவின் ஆணவக் கொலையில் சுர்ஜித் மற்றும் அவரது தந்தை எஸ்.ஐ. சரவணன் கைது செய்யப்பட்டனர். சி.பி.சி.ஐ.டி., போலீசார் இருவரையும் காவலில் எடுத்து இரண்டு நாட்கள் விசாரித்தனர்.

சம்பவம் நடந்த அன்று கொலைக்குப் பிறகு சுர்ஜித் டூவீலரில் துாத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சென்றுள்ளார். அவரது தாயார் கிருஷ்ணகுமாரியின் அக்கா வீடு அங்கு உள்ளது. அக்கா மகன் ஜெயபால் 30, கிரஷர் குவாரி நடத்தி வருகிறார். அவரிடம் சுர்ஜித் அடைக்கலம் அடைந்தார். பிறகு அவர் தந்தை சரவணன் மூலம் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தில் சுர்ஜித்திற்கு அடைக்கலம் தந்த ஜெயபாலை, போலீசார் கைது செய்தனர்.

இரண்டு நாள் விசாரணைக்கு பிறகு நேற்று மாலை திருநெல்வேலி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சுர்ஜித், தந்தை சரவணன் மற்றும் ஜெயபாலை ஆஜர்படுத்தினர்.






      Dinamalar
      Follow us