sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

மருத்துவ காப்பீடு அட்டைகள் குப்பையில் வீசப்பட்ட அவலம்

/

மருத்துவ காப்பீடு அட்டைகள் குப்பையில் வீசப்பட்ட அவலம்

மருத்துவ காப்பீடு அட்டைகள் குப்பையில் வீசப்பட்ட அவலம்

மருத்துவ காப்பீடு அட்டைகள் குப்பையில் வீசப்பட்ட அவலம்


ADDED : ஜூலை 31, 2025 02:47 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 02:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:கோவில்பட்டியில், முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டைகள், குப்பையில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு அலுவலக வளாகத்தில், புள்ளியியல் துறை அலுவலக வாசல் அருகே, 50க்கும் மேற்பட்ட முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள் நேற்று குப்பையில் கிடந்தன.

இதைக்கண்ட, கோவில்பட்டி, சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜேஷ் கண்ணா, அட்டைகளை, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்.

தாலுகா அலுவலக அதிகாரிகள் கூறுகையில், 'மருத்துவ காப்பீட்டு அட்டைகள், எவ்வாறு குப்பைக்கு வந்தன என்பது குறித்து விசாரிக்கிறோம்' என்றனர்.

சமீபத்தில் கோவில்பட்டியில் நடத்தப்பட்ட முகாமில் கலந்து கொண்டவர்களிடம், மருத்துவ காப்பீடு வழங்க ஆவணங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், அட்டைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அவற்றை பயனாளிகளுக்கு வழங்காமல், அலட்சியமாக குப்பையில் வீசி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us