sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

குலசை., வீரமனோகரி கோயிலில் கதவை உடைத்து பொருட்கள் கொள்ளை

/

குலசை., வீரமனோகரி கோயிலில் கதவை உடைத்து பொருட்கள் கொள்ளை

குலசை., வீரமனோகரி கோயிலில் கதவை உடைத்து பொருட்கள் கொள்ளை

குலசை., வீரமனோகரி கோயிலில் கதவை உடைத்து பொருட்கள் கொள்ளை


ADDED : ஆக 17, 2011 02:33 AM

Google News

ADDED : ஆக 17, 2011 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடன்குடி : குலசேகரன்பட்டணம் வீரமனோகரி அம்மன் கோயிலில் கதவை உடைத்து அம்மன் சிலை உட்பட்ட பொருட்களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; குலசேகரன்பட்டணம் வடக்கூர் வீரமனோகரி அம்மன் கோயில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் பூஜை வைப்பதற்காக பகலில் பூசாரி கோயிலை திறந்துள்ளார். உள்கதவு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தார். கோயிலின் ஜன்னல் கம்பியை அறுத்து மர்ம ஆசாமிகள் கோயிலில் இருந்த செம்பினால் செய்யப்பட்ட ஒன்றரை அடி உயரமுள்ள உற்சவர் சிலை, ஒரு சாண் உயரமுள்ள அம்மன் சிலை, வெள்ளி கிரீடம், வெள்ளி மார்பு கவசம், ஒட்டியானம், மார்பு அங்கி, சூலக்கை ஆகிய பொருட்களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துள்ளனர். இது குறித்து கோயில் அக்தார் வீரபாகு வல்லவராயர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கோயிலுக்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளைபோன பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.80 ஆயிரம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.










      Dinamalar
      Follow us