sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

அரசின் புதிய உத்தரவுப்படி வாகனங்களில் நம்பர் இல்லை என்றால் பதிவுச்சான்று ரத்து

/

அரசின் புதிய உத்தரவுப்படி வாகனங்களில் நம்பர் இல்லை என்றால் பதிவுச்சான்று ரத்து

அரசின் புதிய உத்தரவுப்படி வாகனங்களில் நம்பர் இல்லை என்றால் பதிவுச்சான்று ரத்து

அரசின் புதிய உத்தரவுப்படி வாகனங்களில் நம்பர் இல்லை என்றால் பதிவுச்சான்று ரத்து


ADDED : செப் 09, 2011 12:54 AM

Google News

ADDED : செப் 09, 2011 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி : அரசு அறிவித்துள்ளபடி வானங்களில் நம்பர் பிளேட் எழுதாவிட்டால் வாகனத்தின் பதிவுச்சான்று ரத்து செய்யப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட போக்குவரத்துத்துறை அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் இதுபோன்ற தண்டனையில் இருந்து தப்பிக்க உடனடியாக நம்பர் பிளேட்டை அரசு உத்தரவுப்படி மாற்றி விடுவது நல்லது. தமிழகத்தில் வாகனங்களின் நம்பர் எழுதுவதில் புதிய நடைமுறை புகுத்தி போக்குவரத்துதுறை உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் கலெக்டர் ஆஷீஷ்குமார் ஆலோசனையின் பேரில் வட்டார போக்குவரத்து அதிகாரி ராமலிங்கம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் சந்திரசேகரன், பாத்திமாபர்வீன் வாகன சோதனை மேற்கொண்டு மக்களுக்கு இது சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். டிரைவிங் ஸ்கூல்கள், மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டன. டிஜிட்டர் பேனர்கள் வைக்கப்பட்டன. வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்ட அவகாசம் 31.8.2011 முடிந்தது. இதனை தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்துதுறை அதிகாரிகள் ஒரு மாவட்டத்திற்கு சென்று சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. தூத்துக்குடியில் ஆர்.டி.ஓ ராமலிங்கம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சந்திரசேகரன், பாத்திமாபர்வீன் ஆகியோர் இது சம்பந்தமாக தொடர் சோதனை மேற்கொண்டு நம்பர் பிளேட் மாற்றாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கிடையில் அடுத்த அதிரடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் மோட்டார் வாகன புதிய சட்டத்தின் படி வாகனங்களில் நம்பர் எழுதாத வாகனங்களின் பதிவுச்சான்று ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உடனடியாக இவை அமல்படுத்தப்பட்டு விட்டதால் இனிமேல் சிக்கும் வாகனங்களில் பதிவுச்சான்று ரத்தாகும் நிலை உருவாகி இருக்கிறது. மேலும் போக்குவரத்து அதிகாரிகளின் ஒட்டு மொத்த சோதனை இன்னும் சில நாட்களில் தூத்துக்குடியில் நடக்கும் என்று மோட்டார் வாகன ஆய்வாளர் சந்திரசேகரன் தெரிவித்தார்.










      Dinamalar
      Follow us