sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

டெல்லி குண்டு வெடிப்பில் பலியான துறைமுக இன்ஜினியர் உடல் தகனம்

/

டெல்லி குண்டு வெடிப்பில் பலியான துறைமுக இன்ஜினியர் உடல் தகனம்

டெல்லி குண்டு வெடிப்பில் பலியான துறைமுக இன்ஜினியர் உடல் தகனம்

டெல்லி குண்டு வெடிப்பில் பலியான துறைமுக இன்ஜினியர் உடல் தகனம்


ADDED : செப் 11, 2011 01:01 AM

Google News

ADDED : செப் 11, 2011 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவைகுண்டம் : புதுடெல்லி ஹைகோர்ட் வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்பில் பலியான தூத்துக்குடி துறைமுக இன்ஜினியரின் உடல் சொந்த ஊரான ஆழ்வார்கற்குளத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

புதுடெல்லி ஹைகோர்ட் வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் சம்பவ இடத்தில் 11 பேர் பலியாயினர். இந்த கோரசம்பவத்தில் துறைமுக பொறுப்புகழக வழக்கு விஷயமாக டெல்லிக்கு சென்ற தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழக இன்ஜினியர் பத்ரன் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனார். இந்நிலையில் அவரது உடல் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆழ்வார்கற்குளத்தி ற்கு ö க õண் டுவர ப்பட் ட து. அங்கு அவருடைய உடலுக்கு துறைமுகபொறுப்புக் கழக தலைவர் சுப்பையா, உறுப்பினர்கள் விஜயசீலன், பெரியசாமி, கதிர்வேல், மணி, மக்கள் தொடர்பு அதிகாரி சேக்முன்னா, வஉசி.,துறைமுக பொறுப்பு கழக அதிகாரிகள் சங்கம், அரசியல் கட்சி சார்பில் ஜான்பாண்டியன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.



மத்திய அமைச்சர் வாசன் ஆறுதல் : மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் வாசன் போனில் அவருடைய மனைவி மற்றும் மகனுக்கு ஆறுதல் கூறினார். மேலும் அவருடைய குடும்பத்திற்கு ரூ.4 லட்சமும், வாரிசு வேலையும் தரப்படும் என்று கூறினார். அதைத்தொடர்ந்து பின்னர் அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. பத்ரனின் உட லை பார்த்து அவரது மø னவி, மகன் மற்றும் உற வினர்கள் கதறி அழுதது கண்களை குளமாக்கியது.










      Dinamalar
      Follow us