/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
சிறுமி உட்பட எட்டு பேரை குதறிய நாய்கள்
/
சிறுமி உட்பட எட்டு பேரை குதறிய நாய்கள்
ADDED : ஆக 11, 2024 11:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பத்துார் : திருப்பத்துார், கோட்டை தெருவில், ஜின்னா ரோடு பகுதியை சேர்ந்த, 8 வயது சிறுமி நேற்று முன்தினம் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அங்கு சுற்றித்திரிந்த ஒரு வெறிநாய் திடீரென கடித்து குதறியதில் அவர் படுகாயமடைந்தார்.
சிறுமியை மீட்ட பெற்றோர், திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமி உட்பட எட்டு பேரை தெரு நாய்கள் கடித்துள்ளன.
நகர பகுதியில் அதிகளவில் நாய் தொல்லை உள்ளதால், நகராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களை பிடித்து, கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய மக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.