ADDED : ஜூலை 13, 2011 10:06 PM
திருப்பூர் : இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கோவை மண்டலம் மற்றும் திருப்பூர்
மாநகர முகவர்கள் சார்பில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் மூலம் பூமியை
பாதுகாப்போம் என்ற அறிவுத்திறன் போட்டி துவக்க விழா, திருமுருகன்பூண்டி
அம்மாபாளையம் சிவசக்தி ஏஜென்சீஸ் வளாகத்தில் நடந்தது.ஐ.ஓ.சி., கோவை மண்டல
விற்பனை
பிரிவு மேலாளர் குமரவேல் தலைமை வகித்தார். ஏ.டி.எஸ்.பி., பாஸ்கரன்,
'பெட்ரோல் நிரப்புங்கள்; பரிசு வெல்லுங்கள்' திட்டத்தில் முதல் கூப்பனை
வழங்கினார். தினமும் ஒரு வாடிக்கையாளருக்கு 100 ரூபாய் மதிப்புள்ள கூப்பன்
மற்றும் தினமும் ஒரு வாடிக்கையாளர்களுக்கு ஒட்டுரக தென்னங்கன்று, மாதம்
இரண்டு வாடிக்கையாளர்களுக்கு சூரிய ஒளியில் இயங்கும் அகல் விளக்கு
வழங்கப்படுகிறது. ஐ.ஓ.சி., சீனியர் மேலாளர் சதீஷ் அலெக்சாண்டர், மேலாளர்
கோவிந்தராஜ், இன்ஜினியரிங் பிரிவு மேலாளர் சதீஷ், உதவி மேலாளர் ராஜா,
தென்னை ஆராய்ச்சி கழக விஞ்ஞானி ஹென்ரி லூயிஸ், பெட்ரோல் பங்க் அசோசியேசன்
தலைவர் நடராஜ், சிவசங்கர், சுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

