sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தி.மு.க., வேட்பாளர் ராஜா பிரசாரம்: அவிநாசியில் பொதுமக்கள் அவதி

/

தி.மு.க., வேட்பாளர் ராஜா பிரசாரம்: அவிநாசியில் பொதுமக்கள் அவதி

தி.மு.க., வேட்பாளர் ராஜா பிரசாரம்: அவிநாசியில் பொதுமக்கள் அவதி

தி.மு.க., வேட்பாளர் ராஜா பிரசாரம்: அவிநாசியில் பொதுமக்கள் அவதி


ADDED : மார் 25, 2024 01:14 AM

Google News

ADDED : மார் 25, 2024 01:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி;அவிநாசியில், தி.மு.க., வேட்பாளர் ராஜா பிரசாரம் மேற்கொண்டபோது, தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஸ்தம்பித்தன. பொதுமக்கள் அவதியுற்றனர்.

நீலகிரி லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் ராஜா, திருப்பூர் மாவட்டம், அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டில் நேற்று பிரசாரத்தை துவக்கினார்.

அமைச்சர் சாமிநாதன், எம்.எல்.ஏ., செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ராஜா பேசுகையில், ''நீலகிரி லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற போதும்,வெற்றி வாய்ப்பு இழந்த போதும், மக்களுக்காக பணியாற்றியுள்ளேன். பணிகளில் குறை இருந்தால் சுட்டிக்காட்டினால், முன்பை விடவும் நேர்மையாகவும், நாணயமாகவும் பணியாற்றுவேன்,'' என்றார்.

சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் மேற்கொண்ட பிரசாரம் காரணமாக, வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. பொதுமக்கள் அவதியுற்றனர். பொதுமக்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.

பட்டாசு வெடிக்கப்பட்டதால், சாலை புகைமண்டலமாக காட்சியளித்தது. ராஜா பிரசாரத்தில் பங்கேற்பதற்காக அழைத்துவரப்பட்டவர்களுக்கு தலா 300 ரூபாய், ஏஜென்ட்கள் மற்றும் கட்சியினரால் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us