ADDED : ஆக 25, 2024 10:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்த தான முகாம் நேற்று நடந்தது. திருப்பூர் நகரம், யாசின்பாபு கிளை சார்பில் கிளை அலுவலகத்தில் இம்முகாம் நேற்று நடைபெற்றது. திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மருத்துவர் குழு இம்முகாமை நடத்தின.
இதில் 35 பேர் ரத்த தானம் வழங்கினர்.மாவட்ட செயலாளர் ஷாஜஹான், மருத்துவர் அணி செயலாளர் முகமது நியாஸ் முன்னிலை வகித்தனர். கிளை நிர்வாகிகள் இஸ்மாயில், ஜான் பாஷா, முஸ்தபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

