sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தானியங்களை காய வைக்க உலர்களம்  அமைக்கணும்

/

தானியங்களை காய வைக்க உலர்களம்  அமைக்கணும்

தானியங்களை காய வைக்க உலர்களம்  அமைக்கணும்

தானியங்களை காய வைக்க உலர்களம்  அமைக்கணும்


ADDED : ஜூலை 20, 2024 01:27 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:உடுமலை பகுதியில், துவரை, உளுந்து, பாசிபயறு, கொள்ளு, கொண்டைக்கடலை, அவரை, தட்டை, மொச்சை என, பயறு வகை பயிர்கள், 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

விவசாயிகள் கூறியதாவது: சிறு, குறு விவசாயிகளே அதிகளவு தானிய சாகுபடியில், ஈடுபடுகின்றனர். அறுவடையின் போது, தானியங்களை பிரித்து, காய வைக்க, உலர்களங்கள் போதுமான அளவு இல்லை.

தானியங்களை காய வைத்து தரம் பிரித்தால் மட்டுமே, நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியும். தற்காலிக தீர்வாக கிராமங்களிலுள்ள தார்ரோடுகளில், தார்ப்பாய் விரித்து தானியங்களை காய வைக்கிறோம்.

ஒழுங்கு முறை விற்பனை கூட உலர்களங்களுக்கு கொண்டு செல்ல, வாடகை மற்றும் கூலி என அதிக செலவாகிறது. எனவே, சாகுபடி பரப்பு அடிப்படையில், கிராமங்கள்தோறும், உலர்களங்கள் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு, தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us