ADDED : செப் 12, 2024 12:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:
திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, 13 ஊராட்சி தலைவர்களுக்கான கூட்டம், கோர்ட் வீதி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது.
திருப்பூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) அனார்கலி தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர். ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு திட்டங்கள், ஏற்கனவே துவங்கப்பட்ட திட்டப்பணிகள் குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது. ஊராட்சி செயலாளர்களும், ஊராட்சி தலைவர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்; நிர்வாகத்தில் குளறுபடி இல்லாமல் செயல்படவும் வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவுறுத்தினார்.