sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பனியன் நிறுவனத்தில் பயங்கர தீவிபத்து

/

பனியன் நிறுவனத்தில் பயங்கர தீவிபத்து

பனியன் நிறுவனத்தில் பயங்கர தீவிபத்து

பனியன் நிறுவனத்தில் பயங்கர தீவிபத்து


ADDED : செப் 17, 2024 05:18 AM

Google News

ADDED : செப் 17, 2024 05:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம்: திருப்பூர் நெருப்பெரிச்சல் ஜி.என்., கார்டன் பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருபவர் செந்தில்குமார், 55, நேற்று முன்தினம் ஞாயிறு விடுமுறை என்பதால், பூட்டப்பட்டு இருந்தது.

இரவு 11:00 மணி அளவில் நிறுவனத்தின் உட்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. நிறுவனத்தின் ஒரு பகுதியில் தீப்பற்றி எரிவதை அறிந்த காவலாளி உடனடியாக திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.

பனியன் துணி அதிகளவில் வைக்கப்பட்டு இருந்ததால், தீ வேகமாக பரவத் தொடங்கியது. தீயணைப்புத் துறையினர் நான்கு தீயணைப்பு வண்டியின் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மூன்று மணி நேரத்திற்கும் மேலாக 10க்கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர்.

தீ விபத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பனியன், உற்பத்திக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த துணிகள், இயந்திரம், கட்டடம் என பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது.

அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தீ விபத்திற்கான காரணம் குறித்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us