sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மண்ணோடு சேர்ந்து மரங்களும் மாயம்

/

மண்ணோடு சேர்ந்து மரங்களும் மாயம்

மண்ணோடு சேர்ந்து மரங்களும் மாயம்

மண்ணோடு சேர்ந்து மரங்களும் மாயம்


ADDED : ஆக 23, 2024 03:13 AM

Google News

ADDED : ஆக 23, 2024 03:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்:திருப்பூர் மாவட்டத்தில், 260க்கும் மேற்பட்ட நீர் நிலைகளில் வண்டல் மண், களிமண் அள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை முறைகேடாக பயன்படுத்தி, கிராவல் மண் கடத்தப்பட்டு வருவதாக புகார் எழுந்து வருகிறது.

பல்லடம் வட்டாரத்தில் அனுப்பட்டியில் துவங்கி, கரடிவாவி, கிருஷ்ணாபுரம், கரைப்புதுார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மண் கடத்தல் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், புளியம்பட்டி கிராமத்தில், கிராவல் மண்ணுடன் சேர்த்து, கருவேல மரங்களும் மாயமாகி உள்ளன.

இங்குள்ள குட்டையில், 50க்கும் மேற்பட்ட கருவேல மரங்கள் இருந்தன. இரண்டு ஆண்டுகள் முன், இதேபோல் வண்டல் மண் அள்ள அனுமதி வழங்கப்பட்ட போதும், குட்டையில் உள்ள மரங்களை வெட்டக்கூடாது என, இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

தற்போதோ, குட்டையில் இருந்த மரங்கள் அனைத்தும் மாயமாகிவிட்டன. வண்டல் மண் என்ற பெயரில், நுாற்றுக்கணக்கான லோடு கிராவல் மண் அள்ளப்பட்டுள்ளது. மண்ணுடன் சேர்த்து மரங்களும் மாயமான இச்சம்பவம், இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புளியம்பட்டி வி.ஏ.ஓ., குணசேகரனிடம் கேட்டதற்கு, ''குட்டையில் மரம் வெட்டியதாக, யாரும் புகார் அளிக்கவில்லை. மரம் கொஞ்சம் இருந்தது; எண்ணிக்கையெல்லாம் தெரியாது. அவை, முள் மரம் தான்,'' என்றார்.






      Dinamalar
      Follow us