sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கூடைப்பந்து போட்டி அரசுப் பள்ளிகள் 0

/

கூடைப்பந்து போட்டி அரசுப் பள்ளிகள் 0

கூடைப்பந்து போட்டி அரசுப் பள்ளிகள் 0

கூடைப்பந்து போட்டி அரசுப் பள்ளிகள் 0


ADDED : ஆக 23, 2024 10:40 PM

Google News

ADDED : ஆக 23, 2024 10:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;சமீபத்தில் திருப்பூரில் நடந்த தெற்கு குறுமைய கூடைப்பந்து போட்டியில், 14, 17 மற்றும் 19 வயது என மூன்று பிரிவிலும் மெட்ரிக் பள்ளி அணிகள் மட்டுமே பங்கேற்றன. இருபது அணிகள் பதிவில், ஒரு அரசு பள்ளி கூட இல்லை.விளையாட்டு ஆசிரியர்கள் கூறியதாவது:

தனிநபர் போட்டிகளை விட, குழு போட்டிகளுக்கு வீரர்களை ஒரு சேர தேர்வு செய்வது சவாலானது; ஷூ, சாக்ஸ் அணிந்து, கச்சிதமான உடற்பயிற்சி, 'வார்ம் அப்' பயிற்சியுடன் அணியைத் தயார்படுத்துவது சற்று கடினம். காரணம், நம் பள்ளி மைதானங்கள் நிலை அப்படி.கூடைப்பந்து மைதானத்தின் தரைத்தளம் தரமாக இருக்க வேண்டும். பெயரளவுக்கோ, மண் தரையில் கூடைப்பந்து விளையாட முடியாது. பந்து மேலே எழாது. ஒரு சிறந்த வீரர், அருமையான மைதானத்தை பார்த்தவுடன் ஆர்வமாக விளையாட களமிறங்கி வருவார். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் கூடைப்பந்து மைதானம் என்பது கானல் நீராக உள்ளது. ஆர்வம் இருந்தும், விளையாட வழியில்லாத நிலை உள்ளது. இதனால், அணிகளும் முழுமையாக உருவாவதில்லை. திறமை காட்ட விரும்புவோர் பள்ளி அல்லது வேறு அணிகளில், கிளப் அணிகளில் சேர்ந்து விளையாடுகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

ரூ.15 லட்சம் வேண்டும்

கூடைப்பந்து பயிற்சியாளர் ஒருவர் கூறியதாவது:கூடைப்பந்து மைதானம் அமைக்க, 65 அடி அகலம், 120 அடி நீளம் கொண்ட இடம் வேண்டும். தரைத்தளம், 'பால்போஸ்ட்' அமைக்க, 12 முதல், 15 லட்சம் ரூபாய் செலவாகும்.அனைத்து அரசு பள்ளிகளிலும் கூடைப்பந்து போட்டிக்கு இவ்வளவு தொகை செலவழித்து, கூடைப்பந்து மைதானம் அமைப்பது சற்று சிரமம் தான். அதே நேரம், மாணவர் எண்ணிக்கை அதிகமாக உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் மட்டுமாவது அமைத்தால் தான், கூடைப்பந்து போட்டியில் ஆர்வம் அதிகமாகும். சிறப்பாக விளையாடும் அணிகளும் உருவாகும்.








      Dinamalar
      Follow us