sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பிரதான கால்வாய் கரையில் குப்பை குவிப்பால் பாதிப்பு

/

பிரதான கால்வாய் கரையில் குப்பை குவிப்பால் பாதிப்பு

பிரதான கால்வாய் கரையில் குப்பை குவிப்பால் பாதிப்பு

பிரதான கால்வாய் கரையில் குப்பை குவிப்பால் பாதிப்பு


ADDED : ஆக 17, 2024 12:33 AM

Google News

ADDED : ஆக 17, 2024 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:மடத்துக்குளம் பேரூராட்சி, அமராவதி பிரதான கால்வாய் கரையில் மலைபோல் தேங்கியுள்ள குப்பை அகற்றப்படாததால், விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

உடுமலை அமராவதி அணை, புதிய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, 25,250 ஏக்கர் நிலங்களுக்கு பாசன நீர் கொண்டு செல்லும் கால்வாயாக அமராவதி பிரதான கால்வாய் உள்ளது.

உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகா என, 64 கி.மீ., துாரம் பயணிக்கும் கால்வாய் கரைகள், கிராமப்பகுதிகளில் குப்பை கிடங்காக மாற்றப்பட்டுள்ளது.

மடத்துக்குளம் பேரூராட்சியில் சேகரமாகும் குப்பை மற்றும் கழிவுகளை, கிருஷ்ணாபுரம் அமராவதி பிரதான கால்வாய் கரையில் கொட்டப்படுகிறது. சுற்றிலும் குடியிருப்புகள், விவசாய நிலங்கள் உள்ள பகுதியில், மலைபோல் கழிவுகள் தேங்கியுள்ளதால், கடும் துர்நாற்றம், சுகாதாரக்கோடு ஏற்படுகிறது.

தற்போது, நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், அமராவதி பிரதான கால்வாய் கரையில் அமைந்துள்ள குப்பை கிடங்கிலிருந்து, குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள், உடைந்த கண்ணாடி பாட்டில்கள், பாசன நீரில் கலக்கும். இதனால், இரு தாலுகாவிலுள்ள பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களும், அதனை குடிக்கும் கால்நடைகளும் பாதித்து வருகின்றன.

எனவே, பாசன கால்வாய் கரையில் உள்ள குப்பை கிடங்கை முழுமையாக அகற்ற வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us