ADDED : ஏப் 02, 2024 10:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;உடுமலை பகுதியில் சுற்றுலா தலமாக உள்ள திருமூர்த்திமலை, அமராவதி அணைகளுக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என சுற்றுலா பயணியர் எதிர்பார்க்கின்றனர்.
உடுமலை அருகே திருமூர்த்திமலை, பஞ்சலிங்கம் அருவி, அமராவதி அணைக்கு தினமும் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் வருகின்றனர். அவர்களுக்கு போதுமான பஸ்கள் இல்லை.
இதனால், பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதுள்ளது. எனவே, இந்த இடங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க, அரசு போக்குவரத்துக்கழகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

