sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருப்பூர் அருகே நள்ளிரவில் கோர விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பலி

/

திருப்பூர் அருகே நள்ளிரவில் கோர விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பலி

திருப்பூர் அருகே நள்ளிரவில் கோர விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பலி

திருப்பூர் அருகே நள்ளிரவில் கோர விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பலி


ADDED : ஏப் 10, 2024 12:49 AM

Google News

ADDED : ஏப் 10, 2024 12:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:காங்கயம் அருகே அரசு பஸ் மீது, கார் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த, மூன்று வயது குழந்தை உட்பட, ஐந்து பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர், காங்கயம் ரோடு, நல்லிகவுண்டர் நகர், புதுநகரை சேர்ந்தவர் சந்திரசேகரன், 60; திருப்பூரில் சாய ஆலை நடத்தி வந்தார். இவரது மனைவி சித்ரா, 57. தம்பதிக்கு சசிதரன், 30, இளவரசன், 26 என்ற மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சசிதரனுக்கு திருமணமாகி ஹரிவி வித்ரா, 30 என்ற மனைவியும், சாக் ஷி என்ற, மூன்று மாத பெண் குழந்தையும் இருந்தது.

சந்திரசேகரனுக்கு, 60 வயது ஆனதால், திருக்கடையூரில் உள்ள அமிர்த காடேசுவரர் கோவிலுக்கு சென்று, 60ம் கல்யாணம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக, திருப்பூரில் இருந்து குடும்பத்துடன் காரில் கிளம்பி நேற்று முன்தினம் சென்றனர். அன்றைய தினம் மாலை திருமணம் வழிபாடுகளை முடித்து விட்டு திருப்பூருக்கு திரும்பி கொண்டிருந்தனர். இரண்டாவது மகனான இளவரசன் காரை ஓட்டி வந்தார்.

நேற்று நள்ளிரவு, 1:00 மணியளவில் திருப்பூர் மாவட்டம், காங்கயம், ஓலப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே கார் சென்று கொண்டிருந்த போது, திருப்பூரில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ், நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த கோர விபத்தில், கார் முழுவதும் சேதமடைந்தது. காரை ஓட்டி வந்த இளைய மகன் இளவரசன், அவரின் தந்தை சந்திரசேகரன், தாய் சித்ரா, அண்ணி ஹரிவி வித்ரா மற்றும் மூன்று மாத குழந்தை ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த மூத்த மகன் சசிதரன் மீட்கப்பட்டு, காங்கயம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவல் அறிந்ததும் காங்கயம் போலீசார், விபத்து நடந்த இடத்துக்கு சென்று, இறந்தவர்களின் உடல்களை, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரசு பஸ்சை ஓட்டி வந்த கரூரை சேர்ந்த சாமிநாதன், 51, நடத்துனர் பழனிசாமி, 53 உள்ளிட்ட பயணிகள் எவ்வித காயமின்றி தப்பினர்.

கோர விபத்தில் கார் முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது. விபத்தில் சிக்கிய வாகனங்களை நீண்ட போராட்டத்துக்கு பின், வெள்ளகோவில் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

அதன் பின்னரே போக்குவரத்து சீரானது.

துாங்கியதால் விபத்து?

போலீசார் கூறியதாவது:மயிலாடுதுறையில் இருந்து நீண்ட துாரம் பயணத்தை மேற்கொண்டு, ஓய்வில்லாமல் காரை ஓட்டி வந்த இளவரசனுக்கு துாக்க களைப்பு ஏற்பட்டு, விபத்து ஏற்பட்டு இருக்கலாம். நீண்ட துாரம் பயணம் இருந்தால், பகலில் மட்டுமே செல்ல வேண்டும். அல்லது எங்காவது ஓய்வெடுத்து, விடிந்ததும் பயணிக்க வேண்டும். இது குறித்து, எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் கூட, விபத்து ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.



நடவடிக்கை வேண்டும்

திருப்பூரில் இருந்து கரூர் வரை உள்ள காங்கயம், ஓலப்பாளையம், வெள்ளகோவில், தென்னிலை, கரூர் பரமத்தி ஆகிய ஊர்கள் உள்ளது. இந்த ரோட்டில், மையத்தடுப்புகள் கிடையாது. இதுதவிர சாலை அகலப்படுத்தப்படாமல், மந்தகதியில் பணிகள் நடக்கிறது. ஓலப்பாளையம் பகுதி வளைவு நிறைந்த பகுதியாக இருந்து வருகிறது. இங்கு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. பெரியளவிலான விபத்து ஏற்படுகிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, மையத்தடுப்பு அமைத்தல், அதிகளவில் ஒளிரும் பட்டை அமைத்தல் உட்பட விபத்து தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.








      Dinamalar
      Follow us