sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆற்றுப்பாலத்தில் அரசமரங்கள் வளர்ப்பு; உறுதியிழக்கும் ஓடுதளத்தால் அச்சம்

/

ஆற்றுப்பாலத்தில் அரசமரங்கள் வளர்ப்பு; உறுதியிழக்கும் ஓடுதளத்தால் அச்சம்

ஆற்றுப்பாலத்தில் அரசமரங்கள் வளர்ப்பு; உறுதியிழக்கும் ஓடுதளத்தால் அச்சம்

ஆற்றுப்பாலத்தில் அரசமரங்கள் வளர்ப்பு; உறுதியிழக்கும் ஓடுதளத்தால் அச்சம்


ADDED : ஜூன் 23, 2024 10:59 PM

Google News

ADDED : ஜூன் 23, 2024 10:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;அமராவதி ஆற்றுப்பாலத்தில், அரச மரங்கள் செழித்து வளர்ந்து, தடுப்பு சுவர் சேதமடைந்தும், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதனால், வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடன் அப்பகுதியை கடக்க வேண்டியுள்ளது.

கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அமராவதி ஆற்றின் குறுக்கே, உயர் மட்ட பாலம் உள்ளது. திருப்பூர் - திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இப்பாலத்தில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் செல்கின்றன.

இந்த பாலம் 1986ல், 12 துாண்களுடன் 152 மீ., நீளம், 10 மீ., அகலத்துடன் கட்டப்பட்டது. ஆற்று நீர் தடையின்றி செல்ல தூண்களுக்கிடையே 21 மீ., இடை வெளியில் ஏழு கண்மாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பாலம் கட்டப்பட்ட போது, எதிர்பார்க்கப்பட்ட வாகன போக்குவரத்தையும் தாண்டி, வாகனங்கள் தற்போது அவ்வழியாக சென்று வருகின்றன.

பயன்பாட்டுக்கு வந்து, பல ஆண்டுகளுக்கு மேல் ஆனதால், பாலத்தின் உறுதித்தன்மை குறித்து, ஆய்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் பாலத்தை கடக்கும் போது பாலத்தில் அதிர்வுகள் ஏற்படுகின்றன.

பாலத்தின் தடுப்பு சுவர்கள் பல இடங்களில் உடைந்துள்ளது; அரச மரங்கள் உள்ளிட்ட பல மரங்கள் செழித்து வளர்ந்து, சுவரின் உறுதித்தன்மை கேள்விக்குறியாக மாறியுள்ளது.

நடைபாதையில் உள்ள சிமென்ட் தளங்கள் பெயர்ந்து போயுள்ளன; இதனால், இரவு நேரத்தில், வாகன ஓட்டுநர்கள் தடுமாற வேண்டியுள்ளது. போதிய எச்சரிக்கை பலகைகளும் இல்லை.

எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் பாலத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து, அடிப்படை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாமல் அலட்சியமாக உள்ளதால், வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடன் பாலத்தை கடந்து செல்லும் நிலையில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us