sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பல்லடத்தில் இன்று 'கள்' விடுதலை மாநாடு

/

பல்லடத்தில் இன்று 'கள்' விடுதலை மாநாடு

பல்லடத்தில் இன்று 'கள்' விடுதலை மாநாடு

பல்லடத்தில் இன்று 'கள்' விடுதலை மாநாடு


ADDED : பிப் 24, 2025 01:08 AM

Google News

ADDED : பிப் 24, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்; தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நடத்தும், கள் விடுதலை மாநாடு இன்று பல்லடத்தில் நடக்கிறது.

தமிழகத்தில், கள்ளுக்கு தடையுள்ள நிலையில், பல்வேறு விவசாய சங்கங்களும், அமைப்புகளும் தடையை நீக்க கோரி பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளன. இருப்பினும், தமிழக அரசு செவிசாய்ப்பதாக இல்லை. இச்சூழலில், கள்ளுக்கான தடையை நீக்கி, விவசாயிகள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், கள்ளை உணவாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற அரசியலமைப்பு சட்ட நடைமுறையை அமல்படுத்த வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கள் விடுதலை மாநாட்டை இன்று நடத்துகிறது.

பல்லடம், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமையில் இந்த மாநாடு இன்று காலை, 9:30 மணிக்கு துவங்குகிறது.

தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லசாமி உட்பட, பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். ''மாநாட்டைத் தொடர்ந்து, கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி அடுத்த கட்ட போராட்டம் அறிவிக்கப்படும்'' என, ஈசன் முருக சாமி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us