sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பின்னலாடை நிறுவனங்களுக்கு 'வரம்' பிணையம் இன்றி ரூ.100 கோடி வரை கடனுதவி

/

பின்னலாடை நிறுவனங்களுக்கு 'வரம்' பிணையம் இன்றி ரூ.100 கோடி வரை கடனுதவி

பின்னலாடை நிறுவனங்களுக்கு 'வரம்' பிணையம் இன்றி ரூ.100 கோடி வரை கடனுதவி

பின்னலாடை நிறுவனங்களுக்கு 'வரம்' பிணையம் இன்றி ரூ.100 கோடி வரை கடனுதவி


ADDED : பிப் 24, 2025 12:53 AM

Google News

ADDED : பிப் 24, 2025 12:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; பிணையம் இல்லா கடன் உதவி திட்டத்தால், திருப்பூரில் உள்ள, குறு, சிறு மற்றும் நடுத்தர பின்னலாடை தொழில் நிறுவனங்கள், புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்தும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பரஸ்பரக் கடன் உத்தரவாத திட்டம், திருப்பூருக்குப் பொருளாதார ஊக்குவிப்பை அளிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத் தரத் தொழில்கள், பிணையம் இல்லாமல், இயந்திரங்களை வாங்கவும், உபகரணங்களை வாங்கவும், வங்கிகளில் கடன் பெறவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்திட்டம் மூலம், பிணையம் இல்லாமல், 100 கோடி ரூபாய் வரை வங்கிக்கடன் பெறலாம்.

தேசியக் கடன் உத்தரவாத நிறுவனம், 100 கோடி ரூபாய் வரையிலான கடனுக்கு, 60 சதவீத காப்பீட்டு உத்தரவாதத்தை வழங்க உள்ளது. மத்திய அரசின், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின், 'உதயம்' தளத்தில் பதிவு செய்த சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், பிணையம் இல்லாத கடன் பெறும் தகுதியை பெறுகின்றன.

முன்னதாக, வங்கி கடன் மற்றும் வேறு வகை கடன்களில், கடன்களை செலுத்தாத கடனாளியாக இருக்கக்கூடாது என்பது மட்டுமே நிபந்தனையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த திட்ட மதிப்பீட்டில், இயந்திரம் மற்றும் உபகரணங்கள் முதலீடு, குறைந்தது, 75 சதவீதத்துக்கு மேல் இருக்க வேண்டும்.

திருப்பூரில் உள்ள, 'நிட்டிங்', சாய ஆலைகள், எம்ப்ராய்டரிங், பிரின்டிங், பின்னலாடை உற்பத்தி என, அனைத்து வகை நிறுவனங்களும், புதிய அறிவிப்பால் பயன்பெறலாம். ''போதிய நிதியாதாரம் இல்லாமல் பரிதவிக்கும் நிறுவனங்க ளுக்கு, பிணையமில்லாத கடன் உதவி என்பது, தொழிலில் வளர்ச்சி பெற மிகுந்த உதவியாக இருக்கும்'' என்கின்றனர் நிறு வன உரிமையாளர்கள்.






      Dinamalar
      Follow us