/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மஹாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
/
மஹாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : செப் 11, 2024 02:24 AM
உடுமலை:குடிமங்கலம் ஒன்றியம், புதுப்பாளையத்தில், மஹாகணபதி, மஹாசக்தி மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் உள்ளது. கோவில் கும்பாபிேஷகத்துக்காக, யாகசாலை பந்தக்கால் நடுதல், வீட்டில் முளைப்பாரி இடப்பட்டது.
வரும், 14ம் தேதி கும்பாபிேஷக விழாவையொட்டி, காலை, 5:00 மணி முதல், மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ேஹாமம், ஸ்ரீ துர்க்கை லட்சுமி, சரஸ்வதி பூஜை ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை ேஹாமம், தன்வந்திரி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது.
காலை, 8:00 மணிக்கு புற்றுமண் எடுத்து வந்து கங்கணம் கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.காலை, 8:45 மணிக்கு, முளைப்பாலிகை, பஞ்சதீர்த்தம் எடுத்து வருதல், மாலை, 4:00 மணி முதல் முதற்கால யாக பூஜை நடக்கிறது.
வரும், 15ம் தேதி காலை 5:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை துவங்குகிறது. காலை, 8:00 மணிக்கு மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.