/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி கோவிலில் மண்டல பூஜை நிறைவு: திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்
/
அவிநாசி கோவிலில் மண்டல பூஜை நிறைவு: திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்
அவிநாசி கோவிலில் மண்டல பூஜை நிறைவு: திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்
அவிநாசி கோவிலில் மண்டல பூஜை நிறைவு: திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்
ADDED : மார் 21, 2024 11:41 AM

அவிநாசி;அவிநாசியில் லிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் மண்டல பூஜை நிறைவு நாளை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதாக விளங்கும் ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், பிப்., 2ம் தேதி மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. அதன்பின், தொடர்ந்து, 48 நாட்களுக்கு, தினமும் காலை, மதியம் மற்றும் மாலை என, 3 கால மண்டல பூஜைகள் நடைபெற்று வந்தது.
நிறைவு நாளில், ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத சந்திரசேகர பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. முன்னதாக கோவிலில் திருக்கல்யாண மண்டபத்தில் கூனம்பட்டி திருமடம், வேதாகம பாடசாலை முதல்வர், நடராஜ சுவாமி முன்னிலையில், கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து, ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத சந்திரசேகர பெருமானுக்கு 16 வகையான திரவியங்களில் அபிஷேகம், ஆராதனைகள் மற்றும் மஹா தீபாராதனை, திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
விழாவையொட்டி, புஷ்ப பல்லக்கில், சோமாஸ்கந்தருடன், பிரியாவிடை அம்மன் எழுந்தருளி எதிர்சேவை செய்து, நான்கு ரத வீதிகளிலும் திருவீதியுலா காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

