/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விளையாட்டு போட்டி நடத்த உத்தரவு
/
விளையாட்டு போட்டி நடத்த உத்தரவு
ADDED : ஆக 23, 2024 12:17 AM
இந்திய அணி ஹாக்கி வீரர் தயான்சந்த் பிறந்த தினம் (ஆக., 29) தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் விளையாட்டுத்துறை சார்ந்தவர்களுக்கு பரிசு வழங்கி, பாராட்ட ஏதுவாக, ஆக., 26 முதல், 31 வரை மூன்று வரை ஆறு நாட்கள் வாலிபால், டென்னிஸ், கிரிக்கெட், பூப்பந்து, சதுரங்கம், கூடைப்பந்து, மேசைப்பந்து, கயிறு தாண்டுதல், கோ கோ மற்றும் தடகளம், உள்ளரங்க விளையாட்டு போட்டிகளை கல்லுாரிகளில் நடத்த வேண்டும்.
மத்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயல்பாடுகளை கருத்தரங்கம், விழிப்புணர்வு வாயிலாக எடுத்துரைக்க வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களில் ஒருங்கிணைப்பு குழு அலுவலர்களை நியமித்து, நிகழ்வுகள், போட்டி குறித்த விபரங்களை 'பிட் இந்தியா' தளத்தில் பதிவேற்ற வேண்டும் என யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது.

